Wednesday, March 28, 2012

உண்மை சம்பவம் : எதிரில் எதிரி

உண்மை  சம்பவம் : எதிரில் எதிரி

டிடிங்,டிடிங் என்று அழைப்பு மணி அலறியது.
சமயலறையில் வேலையில் இருந்த இருந்த சுகுணா சேலை தலைப்பில் கையை துடைத்தவாரே கதவை திறந்தாள். எதிரில் எதிர் வீட்டு துர்கா கோபத்துடன் நின்றாள். இவள் எதற்கு என் வீட்டு கதவை தட்டுகிறாள் என்று நினைத்தவாரே "என்ன ?" என்றாள்.

"நீ தான் என் வீட்டு கொடியை கழட்டின்னாயா ?"
"அது உங்க வீட்டு கொடியின்னு எனக்கு தெரியாது, ரொம்ப உயரம் குறைவாக இருந்தது. கட்டியிருந்த கொம்பும் உடைந்து இருந்தது. அதனால்தான் கழட்டி வைத்தேன்" என்றாள் சுகுணா.  

அதெப்படி நீ கழட்ட போயிற்று என்று பிடித்து கொண்டாள் துர்கா. எட்டு வீடு கேட்கும் படி காச்சு காச்சு என்று காச்சி எடுத்து விட்டு தான் அடங்கினாள்.
 சுகுணா எவ்வளவோ தான் வேணுமென்றே செய்யவில்லை என்றாலும் துர்கா கேக்கவில்லை. 

பிளாஷ் பேக்  
 சுகுணாவிற்கு அழுகையை அடக்க முடியவில்லை. எப்படி இருந்த துர்க்கா இப்படி ஆகிவிட்டாள். துர்க்கா மூடி டைப் தான். எதிர் வீடாக இருந்தாலும் வந்த புதிதில் சுகுணாவிடம் முகம் கொடுத்து பேச ஆரம்பிக்க வில்லை. "ஒருத்தி எதுத்த வீட்டில் இருக்கிறவங்க கிட்ட பாத்து சிரிக்க  கூடவா மாட்டா?" என்று கணவனிடம் அங்கலாய்தாள். மேல் வீட்டில் இருக்கும் ஜமுனா மூலமாகத்தான் மெதுவாக பேச ஆரம்பித்தாள். துர்காவின் மகன் ஒரு தடவை சுகுணாவின் குழந்தைகள் படிக்கும் போது அதை கெடுப்பது போல வீட்டுக்குள் வந்து விளையாட்டு காட்டி கொண்டிருந்தான்.
 அது சுகுணாவுக்கு பிடிக்காமல் "நீ போய் நாளைக்கு வா விளையாட"   என்று சொல்லி அவனை அனுப்பி கதவை சாத்தினாள். அது முதல் துர்கா சுகுணாவிடம் பேசவில்லை. சுகுணாவே துர்கவிடம் போய் "நான் என்ன தப்பு செய்தேன்னு இப்படி இருக்கீங்க?" என்று கண் கலங்க கேட்ட போது "அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்று சொன்னாலும் துர்கா பேசவே இல்லை.     

துர்காவின் கணவர் சேகர் ஆப்டெக்கில் பிரான்ச் மேனேஜர் ஆக இருந்தார். ஒரு பையன் துர்காவிற்கு. சேகர் ஒரு மாருதி வண்டி வைத்திருந்தார்.  அதை தினமும் காலையில் வாக்கிங் முடிந்த பிறகு கழுவி துடைத்து பிறகே மற்ற வேலை செய்வார். கேட்டால் நம்ம வண்டிய வச்சுக்கிற அழகப் பார்த்தாலே நம்ம எப்படின்னு தெரியனுங்க " என்பார். சுகுணாவிடமும் நன்றாக பேசுவார்.

துர்க்கா வந்து கத்தி விட்டு சென்ற பிறகு அழுகையுடன் தன் கணவருக்கு
போன் பண்ணி ஒரு பாட்டம் அழுது விட்டு நடந்ததை சொன்னாள்.
சுகுணாவின் கணவன்  தான் வந்து சேகரிடம் பேசுவதாக சொன்னான். அதுவும் சுகுணாவுக்கு நல்லதாக பட்டது. துர்கவிடம்  தன் கணவன் பேசி  அவனுடனும் ஒரு சண்டை போட்டாலும் போடுவாள்.சேகரிடம் பேசுவதே நல்லது என்று நினைத்துக்கொண்டாள்.

மறு  நாள் சேகர் காரை துடைத்து விட்டு வரும் போது சுகுணாவின் கணவன் சேகரை பார்த்து நடந்ததை சொல்லி, சாதாரண விஷயத்துக்கு இப்படி
ஓவர் ரியாக்ட் பண்ண வேண்டாம் என்று சொல்லி இனி ஏதும்
பிரச்னையென்றால் சேகர் தன்னிடமே சொல்ல வேண்டும் என்று கேட்டு கொண்டான். சேகரும் தன் மனைவியிடம் எடுத்து சொல்வதாக சமாதானம் சொன்னான்.
 
துர்க்கா அழுகை
ஒரு மாதம் கழித்து ஒரு நாள் சேகர் பெங்களூர் ஆபீஸ் டூர் சென்ற சமயமாக
துர்க்கா  சுகுணாவின் வீட்டை தட்டி சுகுணாவின் கணவனிடம்

"நீங்க என் வீட்டுகாரரிடம் என்ன பேசினீங்கன்னு தெரியல, உங்களால  எங்களுக்குள்ள பெரிய சண்டை" 

"நான் அன்னிக்கி நடந்த விஷயத்தை பத்தி தான் சொன்னேன். இனிமே 
எதுவானாலும் உங்க வீட்டுக்காரர் என்கிட்டே சொல்லட்டும்ன்னு தான் சொன்னேன்"    

"என் வீட்டுக்காரர் என்கிட்டே இப்படி சண்டை போட்டதே இல்லை. உங்களால் என் வாழ்கையே நாசமாயிடும் போல இருக்கு"  என்றாள். 

பிரச்னை வேறு மாதிரி செல்வதை அறிந்தவன் "சரி என்னால் உங்களுக்குள் பிரச்னை வேண்டாம். நான் சேகர் வந்ததும் பேசுகிறேன்" என்றான்.

ஒரு வாரம் கழித்து துர்க்கா வீட்டில் இருந்து "டொம்  டொம்மென்று சத்தம் கேட்டது. சேகர் இன்னும் பெங்களூரில் இருந்து திரும்பி இருக்கவில்லை. ஆனால் வீட்டில் ஆளரவம் தெரிந்தது. வேலையாட்கள்  சிலர்  பெட் ரூமில் இருக்கும் AC  யை கழற்றி கொண்டு இருந்தனர். அவர்களிடம் 
விசாரித்த போது "வீடு மாத்துராங்கமா" என்று சொல்லி விட்டு நடையை  கட்டினர்.

துர்காவின் அண்ணன்கள் வந்திருப்பது தெரிந்தது. மாலைக்குள் அனைத்தையும் 
காலி பண்ணி விட்டு போய் விட்டாள். இரவு வந்த கணவனிடம்  "என்னால்தான் அவள் வீட்டையே காலி பண்ணி விட்டு போய் விட்டாள்" என்று அழுதாள் சுகுணா. அவள்  கணவனோ "விடு இதில் நம்ம தப்பு எதுவும்    இல்லை. சேகர் இப்படி சண்டை போடுவார்ன்னு நமக்கு தெரியவா  செய்யும். எங்க இருந்தாலும் அவங்க ரெண்டு பெரும் நல்லா இருக்கட்டும். தினம் தினம் சண்டைக்காரி முகத்தில் முழிக்கிற கொடுமையாவது  இப்போ இல்லை " என்று சொன்னான்.                 

ஷாக்கான சேகர்   
இது நடந்து முடிந்த பிறகு வந்த சனி கிழமை சேகர் பெங்களூரில் இருந்து  வந்து இறங்கினார். சரி முழுவதும் காலிபண்ணவில்லை  போலிருக்கிறது. 
மிச்சம் இருப்பதை எடுத்து கொண்டு  போறார் என்று நினைத்தாள்  சுகுணா. சிறிது நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த  சேகர் பேய்  அறைந்தவனை போல்  போன் மேல் போன்  போட்டு யாரிடமோ பேசினான். பின்பு சுகுணாவிடம் வந்து "துர்க்கா எங்கே போறேன்னு சொல்லிட்டு போனாளா ?" என்று கேட்கவும் சுகுணாவிற்கு தூக்கி வாரி  போட்டது  "என்னது வீடு காலி பண்ணியது உங்களுக்கு  தெரியாதா?" என்று கேட்டாள். "எனக்கு   எதுவும் தெரியாது அன்னைக்கு  போனவன்   இப்போ தான்   வரேன்"  என்றான். சரியாய் போச்சு என்று துர்க்கா வந்து தன் கணவனிடம் பேசியதை சொன்னாள். "நானும் கொஞ்சம் ஹார்ஷ் ஆக  பேசிட்டேன்" என்றான் சேகர். சரி இப்படி ஆனாலும் அவங்க அம்மா வீட்டுக்கு தான் போய் இருப்பாள் போய் கூட்டி  வாருங்கள் என்றாள் சுகுணா. 

சுகுணாவுக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. "இப்படியா ஒருத்தி
புருஷனுக்கு தெரியாம வீட்டையே காலி பண்ணிட்டு போவா?" என்று பினாத்தி கொண்டிருந்தாள். போன சேகர் திரும்பி வந்தார் தனியாக.
கேட்டபோது துர்கா தன்னிடம் எதுவும் பேசவில்லை என்றும், அவளுடைய 
அண்ணன்கள் தான் அவள் உன்னுடன் வாழ மாட்டாள்  என்றும்,  அவன் மீது வரதட்சணை கொடுமை பண்ணியதாக போலீசில் புகார் பண்ணி 
இருப்பதாக சொன்னார். தன் மகன் கூட தன்னிடம் சரியாக பேசவில்லை 
என்றார். என்னடா தலை வலி போய் திருகு வலி வந்த கதை ஆகி  விட்டதே என்று நினைத்தாள் சுகுணா. சேகர் தன் துணியை மட்டும் விட்டு விட்டு தன் கார் மற்றும் பைக்கை கூட எடுத்து சென்று விட்டாள் என்று சொன்னார்.  

உண்மை தெரிந்தது            

துர்க்கா சுகுணாவிடம் தான் சண்டை போட்டிருந்தாலும் மேல் வீட்டு ஜமுனாவிடம் நல்லா பழகி கொண்டு இருந்தாள்.  இந்த களேபரம் எல்லாம் முடிந்து ஒரு நாள் ஜமுனா சுகுணா வீட்டிற்க்கு சென்று "உங்களுக்கு விஷயம் தெரியுமா  ?" என்று ஆரம்பித்தாள்.

அவள் சொன்ன விவரம் இதுதான் "சேகர் ஒரு செலவாளி. வாங்கும்    சம்பளத்துக்கு   ஏற்ப குடும்பம் நடத்தாமல், கிரெடிட் கார்டு மற்றும் பர்சனல்  லோன் வாங்கி செலவு செய்கிறானாம். இருக்கின்ற கார் பைக் கூட அதில் வாங்கியது தானாம். அவன் சென்னைக்கு  வந்ததே ஊரில் வாங்கிய  கடனை  அடைக்கத்தான். ஆனால் அவன் இங்கும் எல்லா பாங்கிலும் பர்சனல் லோன் வாங்கி இருக்கிறான். அதனால் தான், துர்கா எல்லாத்தையும் வழித்து  எடுத்துக்கொண்டு  போய் விட்டாள்".

சுகுணாவால் நம்பவே முடியமில்லை சேகரா இப்படி. தினம் காரை சுத்தமாக
கழுவும் அவன் முகம் வந்து போனது. சுத்தம் காரில் மட்டும் தானா? 

பின் குறிப்பு

1) சேகருக்கும் துர்க்காவுக்கும் டைவேர்ஸ் ஆகி விட்டது.

2) பெங்களூர் போன சேகர் அதற்கப்புறம் சென்னை பக்கமே எட்டி  
    பாக்கவில்லை.

3) துர்கா திரும்பவும் சுகுணா இருக்கும் அதே ஏரியாவில் குடியேறி
    இருக்கிறாள். தனியாக வேலைக்கு போய் தன் மகனை படிக்க
   வைக்கிறாள்.

4) துர்காவின் மகனும் சுகுணாவின் குழைந்தைகளும் ஒரே பள்ளியில்  
    இப்போது படிக்கிறார்கள்.

5) இப்போதும் சுகுணாவின் வாசலில் "மேடம் எதிர் வீட்டில் சேகர்ன்னு
    ஒருத்தர் பர்சனல் லோன் வாங்கிட்டு கட்டவே இல்லை, உங்களுக்கு அவர் 
    அட்ரஸ் தெரியுமா ?" என்று பேங்க் ஏஜெண்டுகள் கேட்டு 
    கொண்டிருக்கின்றனர்.        

6) சேகர் பர்சனல் லோன் மூலம் பாங்குகளை ஏமாற்றி இருக்கும் தொகை 
     மட்டும் அறுபது லட்சம் 

இப்போது சொல்லுங்கள் சுகுணாவின் எதிரில் இருந்த எதிரி  துர்க்காவா  சேகரா?

Tuesday, March 20, 2012

நாட்டு நடப்பு : ரயில்வே ஸ்மார்ட் கார்டு



கடந்த வாரம் குடும்பத்துடன் பல்லாவரம் போக வேண்டி இருந்ததால், ரயிலில் போக முடிவெடுத்தோம். மாலை 5.30 மணி அளவில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் போனால் டிக்கட் எடுக்க மூணு வரிசையில், ஒவ்வொரு வரிசையிலும் மினிமம் அம்பது பேர் இருந்தனர். நானும் ஒரு அனுமார் வாலில் போய் ஜாயின் பண்ணி கொண்டேன். எனக்கு முன்னால் ஒரு T - Shirt போட்ட இளம் பெண். என் மனைவி "நாங்கள் பிளாட்பார்மில்  வெயிட் பண்ணுகிறோம், ஒழுங்கா (இதுக்கு மட்டும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து) டிக்கெட் வாங்கிட்டு வாங்க என்று முன்னாள் இருக்கும் இளம் பெண்ணை பார்த்த படியே சொல்லி விட்டு சென்றார்.

அழகான இளம் பெண்ணாக மட்டும் பிறக்க கூடாது. க்ராஸ் ஆகும் ஒவ்வொரு ஆணும் அந்த பெண்ணை நன்றாக பார்த்து விட்டுதான் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். எஸ்க்யுஸ்  மி என்று இரு பெண்கள் எங்களை கடந்து சென்றனர், வரிசையில் முந்தி நுழைந்து விடப்போகின்றனரோ என்று பார்த்தால் ஒரு மிசின் முன்னால் போய் நின்று ஒரு கார்டை வைத்து டச் ஸ்க்ரீனில் ஏதோ செலக்ட் பண்ணி ஓர் பிரிண்ட் அவுட் எடுத்து கொண்டு போய் விட்டனர். விசாரிக்கும் போது அது புதிதாக வந்திருக்கிற SMART கார்டு என்றார்கள். இது நான் சிங்கப்பூரில் இருக்கும் போது தினம் யூஸ் பண்ணியதுதான். சிங்கப்பூரில் மனித வளம் குறைவு அதனால் முடிந்த வரை ஆட்டோமேட் பண்ணி விடுவார்கள்.

எப்படி வாங்குவது 

நான் டிக்கெட் வாங்கும்போதே  கார்டையும் வாங்கி விட்டேன். சென்னையில் இருக்கும் எல்லா ரயில் நிலையங்களிலும் கொடுகிறார்கள். ரூ 100 கட்டி இந்த கார்டை வாங்கினால் ரூ 50 செக்யூரிட்டி டெபாசிட் மற்றும் ரூ 52 இல் டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.    
 
இதனால் என்ன நன்மை.

கியூவில் நிற்க தேவை இல்லை.  நேராக அந்த மிசினுக்கு சென்று கார்டை அதற்கு உரிய இடத்தில வைத்து விட்டு தற்போதய ஸ்டேஷன் மற்றும் செல்ல வேண்டிய ஸ்டேஷன் செலக்ட் பண்ணினால், உங்கள் கார்டில் இருந்து உரிய அமௌண்டை எடுத்துக் கொண்டு டிக்கெட்டை கொடுத்து விடும்.

மிசின் எங்கெல்லாம் இருக்கிறது 

எனக்கு தெரிந்த வரை பல்லாவரம், மாம்பலம், நுங்கம்பாக்கம், எக்மோர் ரயில் நிலையங்களில் உண்டு. மற்ற நிலையங்களில் இருக்க நிறைய சான்ஸ் உண்டு. பார்த்தவர்கள் பின்னூட்டத்தில் பகிரவும்.

என்ன பிரச்னை வரலாம் 

மிசின் ரிப்பேர் ஆகி ரயில்வே நிர்வாகம் அதை சரி செய்ய தாமதம் ஆனால் திரும்ப கியுக்கு வரவேண்டிய கட்டாயம் மட்டுமே.

ஆனால் துணிந்து வாங்கிவிட்டேன், இது மாதிரியான Technology improvement ஐ நாம் வரவேற்க வேண்டும்.  வரவேற்றால்தான் அரசும் இது மாதிரியான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும். 

இந்த கார்டை திரும்ப ரயில்வே கவுன்டரில் கொடுத்து பணத்தை திரும்ப வாங்கிகொள்ளும் வசதியும் உண்டு.

Sunday, March 18, 2012

ஹோட்டல் பிரவேசம் : மேடவாக்கம் ஹோட்டல் பாரதி

ஹோட்டல் பாரதி


சோழிங்கநல்லூர் ஜங்ஷன் இல் இருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில் உள்ள எல்காட் SEZ இல் வேலை பார்க்கிறேன். சில சமயம் சனி, ஞாயிற்றுகிழமைகளில் கூட வேலை நீண்டால் மதிய சாப்பாடு SEZ ல் கிடைக்காது.வெளியே OMR சாலையில் அமராவதியிலோ, HOT சிப்சிலோ மதிய சாப்பாடு முடியும். ஒரு மாற்றத்திற்காக மேடவாக்கம் பக்கம் போகலாம் என்று போனேன். குளோபல் ஹாஸ்பிடல் தாண்டினால் ஒரு BEND வரும் அந்த இடத்தில் உள்ளது இந்த ஹோட்டல். 

வாசலிலேயே சைனீஸ் மீல்ஸ், தந்தூரி மீல்ஸ் கிடைக்கும் என்று எழுதி
இருந்தார்கள். சைனீஸ் மீல்ஸ் ஆர்டர் பண்ணினேன். அதிக நேரம் எடுக்காமல் உடனே வந்தது.   

  1) வெஜ் பிரைடு ரைஸ் 
  2) வெஜ் நூடுல்ஸ்
  3) கோபி மன்சூரியன் 2 வகை            
  4) கோபி 65 
  
கோபி மன்சூரியன் 2 வகையுமே மிக நன்றாக இருந்தது. வெஜ் நூடுல்ஸ்ம்
சூப்பர். கோபி மன்சூரியன் தனியாக வாங்கினால் ரூ 60 ஆகும். ஆனால்
இதில் மூணு வகை இருந்தாலும் விலை ரூ 85 மட்டுமே. ஒரே குறை ரைஸ் அளவு குறைவாக இருப்பது தான்.          

இது தவிர சாதாரண மீல்ஸ் ரூ 50, தந்தூரி மீல்ஸ் ரூ 60 (என்று நினைக்கிறன்) இருக்கிறது. கொடுத்த காசுக்கு வொர்த்.

தரம்    : ***
சுவை   : ****
காசுக்கு 
வொர்த் : ****        

Tuesday, March 13, 2012

பு(து)த்தகம் :கோல்



அறிமுகமே அட்டகாசமாக இருக்கிறது இந்த புத்தகத்தில்.

அலெக்ஸ்  ரெகோஒரு பிளான்ட்டின் மேனேஜெர். ஒரு நாள் 
அதி காலை பிளான்ட்க்கு வரும் அவர்,அவருடைய பாஸ் ஏற்கனவே அவருடைய அறையில் இருப்பதை கேள்விப்பட்டு பதட்டத்துடன் அவர் அறைக்கு செல்கிறார். 

பாஸின் கெடு
==============

பில் பீச் தான் ரெகோவுடைய  பாஸ். கறாரான பேர்வழி. வேலை ஆகவேண்டும் இல்லை என்றால் வெட்டி விடவேண்டும் என்ற பாலிசி உள்ள ஆள். அவர் காலங்கார்த்தால தன் அறையில் இருக்கிறார் என்றால் ஏதோ ப்ராப்ளம். அந்த ப்ராப்ளம் ரெகோவுக்கு தெரிந்தே இருக்கிறது. அவனுடைய பிளான்ட் நஷ்டத்தில் இருக்கிறது. அது மொத்த கம்பெனிக்கும்    பெரிய ப்ராபளமாகிக் கொண்டிருக்கிறது என்று ரெகோவுக்கும் தெரியும்.

பில் பீச், ரெகோ உட்காரும்  சேரில் அட்டகாசமாக உட்கர்ந்து கொண்டு இருந்தது ரெகோவின் கோபத்தை மண்டைக்கு ஏற்றியது. 

ரெகோ: (கோபத்துடன்) அது என் சேர்

பில் : உன் பிளான்ட்டே மூழ்கிக் கொண்டிருக்கிறது உன் சேரை பற்றி கவலை படுகிறாய். இன்றிலிருந்து மூணு மாதத்தில் இந்த பிளான்ட்டை லாபத்தில் நடத்தா விட்டால் இந்த பிளான்ட்டை மூட நான் CEO விடம் பரிந்துரை செய்து விடுவேன். 

ரெகோ: மூணு மாத அவகாசம் ரொம்ப குறைவு.

பில் : ஆனால் உன் பிளான்ட்டை விட நம் கம்பெனி முக்கியம். மூணு மாதம். மூணே மாதம்.

என்று சொல்லியவாரே  பில் போயே போய் விட்டான்.  

ரெகோவுக்கு இடி விழுந்தால் போல இருந்தது. இதை எப்படி சமாளிக்க போகிறேன் என்று நினைத்தவாரே ஜன்னலின் வழியே பார்த்தான். தொழிலாளர்கள் சுறுசுறுப்புடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தது 
தெரிந்தது. தான் இந்த பிளான்ட்டை லாபத்தில் நடத்தாவிட்டால்  தன் வேலை மட்டுமல்ல தன் கீழே வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை போய் விடும்.  அவர்களது குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்கும்.  கடவுளே என்று கடவுளை கூப்பிடுவதை தவிர வேறெதுவும் தெரியவில்லை.
=======================================================================
இப்படி ஒரு சம்பவம் நம் வாழ்க்கையில் நடந்தால் நாம் என்ன செய்வோம். உடனே  ஜாப் சைட்டில்வேலை தேட ஆரம்பித்து விடுவோம் அல்லது நம் பிரண்ட்சுக்கு போன் பண்ணி "மச்சான் உன் கம்பெனியில் எனக்கு ஒரு வேலை பார்த்து கொடுடா"  என்று ஆரம்பித்து விடுவோம். ஆனால்  ரெகோ  அப்படி செய்யவில்லை. அவர் தன் பிளான்ட்டை நேசித்தார். என்ன ஆனாலும் இந்த பிளான்ட்டை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று  முடிவு செய்தார். தன் பிளான்ட்டை எப்படி  தன்  காலேஜ் ப்ரொபசர் ஜோனா  உதவியுடன் எப்படி காப்பாற்றினார் என்பதே கதை.

இது ஒரு நாவல் + மேலாண்மை சம்பந்தமான  புத்தகம் . மேலாண்மை சம்பந்தமான புத்தகம் என்றால் அட்வைசாக அள்ளி தெளித்து விட்டிருப்பார்கள். ஆனால்  இந்த புத்தகம் ஒரு நாவலும் கூட என்பதால் மிக எளிதாக விளங்குகிறது. எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவு எழுத்து நடை. விகடனில் தொடர் கதையாக வந்த போதே இதை படித்தேன். புத்தக கண்காட்சியில் இப்போது  வாங்கினேன். ஷ்யாமின் வண்ண ஓவியங்களுடன் மிக நன்றாக இருக்கிறது. 

ஏன் படிக்கவேண்டும் : எந்த ஒரு பெரியவேலையுமே சின்ன சின்ன வேலைகளால் ஆனது. இந்த சின்ன சின்ன வேலைகள் எப்படி பெரிய வேலை முடிவடைவதை கட்டுபடுத்து கிறது என்பதே எந்த புத்தகத்தின் அடி நாதம். நாம் நம் வேலை ஏன் சொன்ன நேரத்தில் முடிவடைய வில்லை என்பதை தோண்டி துருவும்போது இந்த புத்தகத்தை எடுத்து படித்தால் விடை கிடைக்கும். Theory of constraints பற்றியும் bottle neck centers  பற்றியும் புட்டு புட்டு வைத்திருக்கிறார்.  


உதாரணத்துக்கு ஒரு கார் கம்பெனியில் ஒரு காரை உருவாக்க ஆயிரக்கணக்கான  உதிரி பாகங்கள் தேவை.  இதில் ஒரு உதிரி பாகம் இல்லை என்றால் கூட  கார் முழுமை அடையாது . ஒரு உதிரி பாகத்துக்காக ஒரு காரை விற்பனை செய்யகூடிய வாய்ப்பு போய்விடுகிறது. ஒரு இல்லாத உதிரி பாகம் கார் விற்பனை ஆவதையே தடுத்து விடுகிறது. 

இப்போது அந்த கார் கம்பெனியில் எல்லோரும் ஓவர் டைம் போட்டு அந்த ஒரு பாகத்தை தவிர மற்ற பாகங்களை உருவாக்கினால், அந்த கம்பெனி நல்ல  நிலைமையில் போய்க் கொண்டிருப்பதாக அர்த்தமா? அதாவது அந்த கம்பனியின்  கோல்  என்ன  என்று தெரியாமல் அவரவர் வேலையை செய்தால் அந்த
கம்பெனி   உருப்பட முடியாது . அந்த கம்பெனியின் கோல் காரை விற்பது. இது எல்லாருக்கும் புரிந்தால் இல்லாத பாகத்தின் முக்கியத்துவம்  எல்லாருக்கும்  தெரியும். 


நம் எல்லோருடைய வாழ்கையிலும் இந்த புத்தகத்தில் சொல்லி இருப்பதை செயல் படுத்த முடியும் என்பது இந்த புத்தகத்தின் சிறப்பு.

எழுதியவர் : கோல்ட்ராத் இலியாஹு  

இவர் ஒரு இஸ்ரேல் நாட்டு மேலாண்மை குரு. மேலாண்மையில் இவர் எழுதிய புத்தகங்கள் சக்கை போடு போடுகின்றன. பல நிறுவனங்களை இவர் தன் மேற்பார்வையில் முன்னேற்றி இருக்கிறார். 2011 ம் ஆண்டு காலமானார்.  

தமிழில் : அஞ்சனா தேவ்


பிரசுரம் : விகடன்

விலை : ரூ 110   
=======================================================================